நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை பிரச்சனை!சுப்பிரமணிசாமி தொடர்ந்த வழக்கு சூடுபிடிக்கிறது!

ம.பா.கெஜராஜ்,
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை கையகப்படுத்திய பிரச்சனை தற்போது அமலாக்க பிரிவின் விசாரணை வளையத்துக்குள் உள்ளது. இந்த வழக்கை தொடுத்தவர் சாட்சாத் டாக்டர் சுப்பிரமணிசாமி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வழக்கு தற்போது தூசு தட்டப்பட்டுள்ளதால் சூடுபிடித்துள்ளது.
இந்த வழக்கை பற்றி சுறுக்கமாக பார்ப்போம்,
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு இருந்து பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசார் இதற்கு அனுமதி தரமறுத்தனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படு இருந்தது.
நாட்டின் முதல் பிரதமர் நேருவால் சுதந்திரத்திற்கு முன்பு நிறுவப்பட்ட பத்திரிகை நேஷனல் ஹெரால்டு ஆகும். இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது.
ஆனால் அந்த கடனை நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தாரால் திருப்பி செலுத்த முடியவில்லை.
ஆகவே, அதன் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியையும் இயக்குனர்களாக கொண்ட 'யங் இந்தியா' நிறுவனம் தங்கள் வசமாக்கியது.
இந்த விவகாரத்தில் சுப்பிரமணிய சாமி மூக்கை நுழைத்து, அசோசியேட்டட் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை யங் இந்தியா அபகரித்து விட்டதாக அவர் வழக்கு தொடர்ந்தார்.
அதனைத்தொடர்ந்து, சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
அதில், நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் பொருளாளர் பவன்குமார் பன்சால், மல்லிகார் ஜூன கார்கே ஆகியோரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தது.
அப்படியிருக்க, நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்திக்கு கடந்த 5-ந்தேதியும், சோனியா காந்திக்கு 8-ந்தேதியும் நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்ததால் அவகாசம் கேட்டார். இதனால் அவர் இன்று ஆஜராக புதிய சம்மன் அனுப்பப்பட்டது.
சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரும் அவகாசம் கேட்டார். அவர் 23-ந்தேதி ஆஜராக புதிய சம்மன் அனுப்பப்பட்டது.
சம்மனை தொடர்ந்து ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆஜராவதற்காக இன்று காலை தனது வீட்டில் இருந்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு அக்கா பிரியங்காவுடன் காரில் சென்றார்.
இந்நிலையில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறையை கண்டித்து நாடு முழுவதும் சத்யாகிரக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்து இருந்தது.
டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதற்காக காங்கிரஸ் அலுவலகம் முன்பு திரண்டனர். காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு இருந்து பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் டெல்லி போலீசார் இதற்கு அனுமதி தரமறுத்து, 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.
காங்கிரஸ் தலைமை அலுவலகம் அக்பர் சாலையில் உள்ளது. அங்கிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. விசாரணைக்கு ஆஜராவதற்காக ராகுல் காந்தி காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்றார். அவருடன் காங்கிரஸ் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ்பாகல் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர்.
தடையை மீறி பேரணி செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. துணைநிலை ராணுவ வீரர்கள், போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.
பேரணியாக சென்ற ராகுல்காந்தி உள்ளிட்டவர்கள் சிறிது தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் தடுப்புகளுக்கு மேல் ஏறி நின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஊர்வலமாக சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டார். காலை 11.10 மணி அளவில் ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆஜரானார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ராகுல் காந்தி வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த பேரணி ஆர்பாட்டம் எல்லாம் சொத்தை காப்பாற்றிக் கொள்ளவே நடத்தப்படுவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி தெரிவித்துள்ளார்.