எடப்பாடி டீமை புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆக்கும் பொன்னையன் பேச்சு! ஆடியோ வெளியாகி பரபரப்பு!!

ஜி.சாந்தகுமார்,

அ.தி.மு.க.வில்  தலைவர்கள் கோடியில் புரள்கிறார்கள், தொண்டர்கள் தடுமாறுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் பேசும் ஆடியோ ஒன்று பெரிய செய்தியாகியிருக்கிறது. அவர் எடப்பாடி டீமை தவிடாக்கும் விதமாக அவர் பேசியிருக்கிறார்.

 இது பற்றின விவரம் வருமாறு,

 அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் பேசியதாக சொல்லப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பனுடன் பொன்னையன் பேசியதாக கூறப்படும் இந்த ஆடியோ நேற்று வெளியானது.

  பொன்னையன் பேசியதாக சொல்லப்படும் இந்த ஆடியோவில் அதிமுக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இல்லை, அவருக்கு 9 எம்எல்ஏ க்களின் ஆதரவு மட்டுமே அவரிடம் உள்ளது, வேலுமணி, தங்கமணி போன்றார்தான் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள், அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி முதுகில் குத்திவிட்டனர். எடப்பாடிக்கு வேறு வழியே இல்லை, என்று ஆடியோவில் பதிவாகி உள்ளது.

  அதேபோல் சிவி சண்முகம் பற்றியும் பொன்னையன் பேசியதாக ஆடியோவில் பதிவாகி உள்ளது. அதில், யாரும் கட்சிக்கு விசுவாசமாக இல்லை. சிவி சண்முகத்திடம் 19 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். படையாச்சி எம்எல்ஏக்கள் அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். அவர் பகலில் கூட குடிக்க கூடியவர். கொங்கு மண்டபத்தில் கூட எடப்பாடி கையில் எம்எல்ஏக்கள் இல்லை, என்றும் பொன்னையன் பேசுவதாக இந்த ஆடியோவில் பதிவாகி உள்ளது.

 அதேபோல் கே.பி.முனுசாமி அமைச்சர் துரைமுருகனை பிடித்து குவாரி எடுத்திருக்கிறார். அதில் கோடிகோடியாக சம்பாதிக்கிறார். தலைவர்கள் கோடிகளை பார்க்கிறார்கள், தொண்டர்கள் திண்டாடுகிறார்கள். கே.பி.முனிசாமி நக்சலைட்டுகளுடன் தொடர்பில் இருந்தவர் என்று  டிஜிபி தேவாரம் சொன்னதன் பேரில் ஜெயலலிதா அவரை ஒதுக்கிவைத்திருந்தார் என்றெல்லாம் ஆடியோவில் உள்ளது.

 இந்நிலையில் ஆடியோவில் பேசியது தான் இல்லை என்று ஒரு பக்கம் பொன்னையன் தெரிவித்துள்ளார். தனக்கும் ஆடியோவிற்கும் தொடர்பு இல்லை என்று அவர் கூறியுள்ளார். நான் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானது. மிமிக்கிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொய்யாக ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்கள், என்று அவர் கூறியுள்ளார்.

 ஆனால் பொன்னையனிடம் பேசியதாக சொல்லப்படும் நாஞ்சில் கோலப்பன் இதை பொன்னையன் என்னிடம் பேசினார், அதற்கான ஆதரங்கள் என்னிடம் உள்ளது என்று அடித்துச்சொல்கிறார்.

  இருதரப்பில் ஒருவராவது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார் அங்கு சிடிஆர் எனப்படும் கால் டிடெய்ல் ரிக்கார்ட் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு நடத்தினால், பொன்னையனும் - கோலப்பன்  பேசினார்களா? இல்லையா? என்பது அம்பலமாகிவிடும்.

   அழிக்கப்பட்ட தடயங்களையும் இந்த தொழில் நுட்பம் பதம் பார்த்துவிடும். அப்படி பதம் பார்த்தால் எடப்பாடி அண்ட் டீமை பார்த்து எதிரணியினர் கைகொட்டி சிரிப்பார்கள்.