காலாவதியான கல்குவாரிகள் ஒரு வாரத்திற்குள் மூடப்படும்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் "லை லுக்" சார்பில் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகளும் காலவதியான கல்குவாரிகளும் ஒரு வாரத்திற்குள் மூடப்படும் அணைக்கட்டு கெங்கநல்லூரில் கனிம வளம் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர்மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்கநல்லூரில் சமத்துவ பொங்கல் விழா அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கனிமம் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.
பின்னர் புதுப்பானையில் பொங்கலிட்டு கால்நடைகளுடன் சமத்துவ பொங்கலும் கொண்டாடப்பட்டது. உரியடி விளையாட்டில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டார். இவ்விழாவில் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில், மாவட்ட ஊராட்சிதலைவர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் தமிழக கனிமம் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் காலவதியான மற்றும் அனுமதியின்றி செயல்படும் அனைத்து கல்குவாரிகளும் தமிழக முழுவதும் இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக முழுவதுமாக மூடப்படும்.
திருவள்ளூவர் பல்கலைக்கழக ஊழல்கள் குறித்து பேராசிரியர்களும் பல்கலைக்கழக பணியாளர்களும் என்னை சந்தித்து புகாரை கூறினால் நான் நடவடிக்கை எடுப்பேன் என சொன்னார்.