2047- ல்,பாரதம் பெரிய சக்தியாக மாறும்! பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் பேச்சு!

2047- ல்,பாரதம் பெரிய சக்தியாக மாறும்! பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் பேச்சு!

 ம.பா.கெஜராஜ்,

 வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் "லை லுக்" சார்பில் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  2047-ம் ஆண்டுக்குள் மாபெரும் வளர்ச்சி அடைகிற பாரதமானது அனைத்தையும் விட பெரியசக்தியாக மாறும் என பிரதமர் மோடி பேசினார்.  ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில், பொங்கல் பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடினார். அப்போது 'இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்' என தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். டெல்லியில் நடந்த இந்த பொங்கல் விழாவில் தமிழர் பாரம்பரிய முறைப்படி வெள்ளை வேட்டி அணிந்து பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ''தேச ஒற்றுமையை வலுவாக்க நாம் சபதம் ஏற்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

 மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது அரசு குடியிருப்பில் நேற்று பொங்கல் விழா கொண்டாடினார். அவரது அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சுந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், வர்த்தக அமைச்சர்  பியுஷ் கோயல்டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், பேராசிரியர்கள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி  உள்ளிட்ட தமிழ் பிரபலங்கள் இதில் கலந்துகொண்டார். தமிழர் பாணியில் வெள்ளை வேட்டியுடன், கோட் மற்றும் சால்வை அணிந்திருந்த பிரதமர், அலங்கரிக்கப்பட்ட பந்தலில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானையை வணங்கிவிட்டு, அதில் சர்க்கரையை கலந்து மகிழ்ந்தார். அருகே கட்டப்பட்டிருந்த பசுங்கன்று மீது மலர்களை தூவி வணங்கினார்.

 அப்போது பிரதமர், கைகளை கூப்பி ''வணக்கம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்'' என்று தமிழில் கூறியதும், அனைவரும் உற்சாக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, இந்தியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

இன்றைய பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு தந்த முருகனுக்கு நன்றி. என் குடும்பத்தினர், நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வதுபோல உணர்கிறேன்.

 புனித நாளான பொங்கல் அன்று தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் குதூகலம் நிலவுகிறது. அனைவர் வாழ்விலும் சுகமும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக நிலைத்திருக்க பிரார்த்தனை செய்கிறேன்.

 சிறுதானியங்கள், தமிழ் கலாச்சாரத்தில் இணைந்துள்ளன. சிறுதானியங்களுக்கு நாம் ஆதரவு அளித்து வளர்ப்பதன் மூலம் 3 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர். 'தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு' என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

 தமிழகத்தில் பொங்கல் நாளில் பெண்கள் தங்கள் வீடுகள் முன்பு புள்ளி வைத்து, கோலமிடுகின்றனர். அதில் பல வண்ணங்களை நிரப்புகின்றனர். நம் நாட்டின் பல தரப்பு மக்களும் இந்த கோலத்தை போன்றவர்கள். நாட்டின் வெவ்வேறு மூலையிலும் இருந்தாலும், உணர்வுபூர்வமாக ஒன்றிணைவதால், நமது சக்தி அழகான உருவம் பெறுகிறது.

'ஒரே பாரதம் உன்ன பாரதம்' எனும் தேசிய உணர்வை பொங்கல் பண்டிகை தருகிறது. 2047-ம் ஆண்டுக்குள் மாபெரும் வளர்ச்சி அடைகிற பாரதமானது அனைத்தையும் விட பெரியசக்தியாக மாறும் என பிரதமர் மேடி பேசினார்.