இரண்டாவது யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி!

இரண்டாவது யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி!

த.நெல்சன்,

வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் "லை லுக்" சார்பில் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  'இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்' என்ற பெயரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் இரண்டாவது யாத்திரை மணிப்பூரில்  தொடங்கியது.

   மணிப்பூரில் உள்ள தவுபல் மாவட்ட மைதானத்தில் இருந்து யாத்திரை தொடங்கப்பட்டது. ராகுல்காந்தியின் நடை பயண தொடக்க விழாவில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.     யாத்திரை பயணத்தில் தொடக்க விழாவில் ராகுல் காந்தி பேசும் போது,லட்சக்கணக்கான மக்கள் இங்கே இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள். மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்கவும் அவர்களுக்கு ஆறுதல் கூறவும், இன்றுவரை பிரதமர் மோடி வரவில்லை. பிரதமர், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மணிப்பூரை இந்தியாவின் ஒருபகுதியாக கருதவில்லை என நினைக்கிறேன்.

   மணிப்பூர் மக்களின் வலியை நாங்கள் புரிந்துள்ளோம். உங்களது சோகமும், வலிகளும் எங்களுக்கு புரியும். மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம். வேலைவாய்ப்பின்மை ,விலைவாசி உயர்வால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர் என்றார்.