பொது சிவில் சட்டத்தை உத்தரகாண்ட மாநிலத்தில் துவங்கப்போகிறது! மத்திய அமைச்சர் பேச்சு!

உ.சசிகுமார்,
வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் "லை லுக்" சார்பில் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
தற்போது நாடுளுமன்றம் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் ஏதேனும் ஒரு மாநிலம் முதலிடம் பெறப்போகிறது என்றால் அது உத்தரகாண்டாக தான் இருக்கும் என நான் நம்புகிறேன் என்று சொன்னார்.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, தனது தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே பொது சிவில் சட்டம் உருவாக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன பிரகாஷ் தேசாய் தலைமையிலான ஒரு குழுவை அமைத்து ஒப்புதல் அளித்தார்.
2022ம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலின்போது பாஜக அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று பொது சிவில் சட்டம் என்ப்ஙது நினைவு கூறத்தக்கதாகும்.