மகாராஷ்டிரா அரசுக்கு சிக்கலா? ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி கொடுக்கும் எம்.எல்.ஏ.க்கள்!!

மகாராஷ்டிரா அரசுக்கு சிக்கலா? ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி கொடுக்கும் எம்.எல்.ஏ.க்கள்!!

 ம.பா.கெஜராஜ்,

   மகாராஷ்டிரா அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி கொடுக்கும் அவரது எம்.எல்.ஏ.க்களால் எந்தேரமும் பிரச்சனை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

  சமீபத்தில் சரத்பவாரின் தேசியவாத கட்சிக்குள் பிரிவினையை ஏற்படுத்திய அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியின் கொள்கைக்கு எதிரான ஏக்நாத் ஷிண்டேவுடன் கை கோர்த்தார். இவர்களுக்கு எப்படி சிவசேனா பச்சை மிளகாயோ அதே போல் தான் சிவசேனாவுக்கு நேர் எதிரி தேசியவாத காங்கிரஸ்.

  இது இன்று நேற்று வந்ததல்ல. கட்சியின் நிறுவனர் பால் தாக்ரே உயிருடன் இருந்த போதே ஏற்பட்டது ஆகும். ஆம்,  பால் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார்.

  அப்படியிருக்க மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணியில் அஜித் பவார் நுழைந்தது ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையறிந்து சுதாரித்துக்கொண்ட முதல்வர் ஷிண்டே இன்று அவரது அனைத்து திட்டங்களையும் ரத்து செய்துவிட்டு தனது இல்லத்தில் அவசர கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார் என்பதை சுட்டிக்காட்டி எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

   தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் சரத் பவார்- அஜித் பவார் இடையே போட்டி இருந்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் உடன் எப்படி கூட்டணி அமைக்கலாம் என ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.-க்கள் குரல் எழுப்பியுள்ளார்கள்.

 பால் தாக்கரே சித்தாந்தம் வேறு. தேசியவாத காங்கிரஸ் சித்தாந்ததம் வேறு. ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து செல்ல வேண்டும் என பால் தாக்கரே நினைத்தது கிடையாது. அப்படி இருக்கும்போது அவரது கட்சியான சிவசேனா எப்படி அஜித் பவார் உடன் இணைந்து செயலாற்ற முடியும்? என்ற கேள்வியை அவர்கள் எழுப்புகிறார்கள்.

இதனால் ஷிண்டேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 எனவே நேற்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய ஷிண்டேவுக்கு தொடர்ந்து முதல்வராக இருக்க எம் .எல் .ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

 என்ன இருந்தாலும் புகை அனைந்த மாதிரி தெரியலையே என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.