மருத்துவத்துகு தகுந்த பணம் வசூலிக்க வேண்டும்! முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு அட்வைஸ்!

மருத்துவத்துகு தகுந்த பணம் வசூலிக்க வேண்டும்! முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு அட்வைஸ்!

ஜி.கே.சேகரன்,

 என்ன மருத்துவம் பார்க்கப்படுகிறதோ அதற்கு தகுந்த பணம் வசூலிக்க வேண்டும், நம்மால் குணபடுத்த முடியாத நோய் என்றால் அலோபதி சிகிச்சை பார்த்துக்கொள்ளுங்கள், அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லாமல் அனைத்தையும் நான் குணபடுத்துவேன் என்று அவர்களை ஏமாற்றக்கூடாது. முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு அட்வைஸ் செய்து பேசினார்.

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காசினி ஹாஸ்பிட்டல் அல் கௌசர் ஹெர்பல் இன்டர் நேஷனல் ஹாஸ்பிட்டல் & கல்லூரி புத்தொளி விழா முகல் கார்டனில் உள்ள உள்ளரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு காசினி ஹாஸ்பிடல் நிறுவனரும், அல் கௌசர் ஹெர்பல் இன்டர் நேஷனல் ஹாஸ்பிட்டல் & காலேஜ் தாளாளருமான மருத்துவர் ஹகீம் அக்பர் கவுசர் தலைமை வகித்தார். டாக்டர் எஸ்.ஏ.கே.முதஸ்ஸீர் அர்ஃபாத் அனைவரையும் வரவேற்றார்.

  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசு முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறியுறை வழங்கி பேசினார்.

  அப்போது அவர் பேசியதாவது:-நோயை குணப்படுத்தாதீர்கள், நோயாளியை குணபடுத்துங்கள்,இதைத்தான் யுனானி மருத்துவம் கோட்பாடு. யுனானி மருத்துவம், மூலிகை மருந்து அடிப்படை கோட்பாடாக உள்ளது. நோயாளியின் சுபாவங்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கவேண்டும்.

  உணவை முறையாக அருந்தினால் பல உபாதைகள் குறைத்து விடமுடியும். உணவை நாம் ஒரு மருந்து போல் அருந்த வேண்டும்.  இல்லாவிட்டால் மருந்தை உணவா அருந்து வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

  எந்த மருத்துவத்திற்கும் ஒரு அறம் இருக்கின்றது. நம்மால் குணபடுத்தப்படாத் நோய் என்றால் அலோபதி பார்த்துக்கொள்ளுங்கள், அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்று முதலிலேயே சொல்லாமல் அனைத்தையும் நான் குணபடுத்துவேன் என்று அவர்களை ஏமாற்றக்கூடாது.

  அவர்களுக்கு என்ன மருத்துவம் பார்க்கப்படுகிறதோ அதற்கு தகுந்த பணம் வசூலிக்க வேண்டும். வகுப்புக்கு தவறாமல் செல்லுங்கள், கற்றுக்கொள்வது மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், எந்த ஒரு போதைக்கும் அடிமை ஆகாதீர்கள்.

  தலை சிறந்த யுனானி மருத்துவர்களாக வந்து பலர் உடைய உபாதைகள் போக்க வேண்டும் என்று பேசினார்