மருத்துவரை இளைஞர் ஏன் கத்தியால் குத்தினார்? வாயை திறக்காத தலைவர்கள்!

மருத்துவரை இளைஞர் ஏன் கத்தியால் குத்தினார்? வாயை திறக்காத தலைவர்கள்!

ம.பா.கெஜராஜ்,

மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தினார். ஊழியர்கள் கையில் சிக்கிய அந்த இளைஞரை தாக்கி போலிசாரிடம் ஒப்படைத்தனர். மருத்துவருக்கு ஆதரவாக பேசும் பலரும் ஏன் அவர் குத்தப்பட்டார் என்பதை  பற்றி வாயை திறக்கவில்லை.

இது பற்றின விவரம் வருமாறு,

 சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரேமா. இவரது மகன் விக்னேஷ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரேமா கடந்த 6 மாதங்களாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 தற்போது அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியநிலையில் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தாம்பரம் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிரேமா வலியால் துடித்து அவதிப்பட்டுள்ளார்.

 இதை பார்த்து வேதனை அடைந்த அவரது மகன் விக்னேஷ், நேற்று காலை சுமார் 10 மணி அளவில் கிண்டி கலைஞர் மருத்துவமனைக்கு வந்தார். புறநோயாளிகள் பிரிவில் ஓ.பி. சீட்டு வாங்கிக் கொண்டு, புற்றுநோய் மருத்துவ நிபுணர் பாலாஜியின் அறைக்குச் சென்றார்.

 அங்கு அறையின் கதவை மூடிவிட்டு, "எதற்காக எனது தாயாருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவில்லை" எனக்கேட்டு விக்னேஷ் வாக்குவாதத் தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை (வீட்டில் காய்கறிகள் வெட்டும் கத்தி) எடுத்து மருத்துவர் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் சரமாரியாக குத்தினார்.

   மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் எவ்வித பதற்றமும், பயமும் இல்லாமல், கத்தியை அங்கேயே போட்டுவிட்டு மருத்துவமனை யில் இருந்து வெளியே செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்தலூழியர்கள்பணியாளர்கள், பொதுமக்கள்  உதவியுடன் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்துவந்த கிண்டி போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீஸார் விக்னேஷை கைது செய்து செய்தனர்.

  குத்துபட்ட மருத்துவர் பாலாஜிக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் கிண்டி மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அரசியல் கட்சித்தலைவர்கள் குத்துபட்ட மருத்துவருக்கு ஆதரவாக வரிசை கட்டி குரல் கொடுத்தனர்.

 ஆனால் கத்தியால் குத்தக்கூடிய அளவுக்கு தூண்டிய மருத்துவரையோ, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தத்தைப் பற்றியோ எவரும் வாயைத் திறக்கவில்லை.

  அதே போல் போலீசார் விக்னேஷின் வீட்டுக்குள் சென்று அவரது தாய் தொடர்புடைய மருத்துவ சான்றுகள் மருத்துவ குறிப்புகளை  அள்ளிச்சென்றுவிட்டனர்.

 இது குறித்து பிரேமா ஊடகங்களின் வாயிலாக மக்களுக்கு தெரிவித்தார்.