தமிழக அரசு ஆசிரியைகள் சுடிதார் அணியக் கூடாதா? !

தமிழக அரசு ஆசிரியைகள் சுடிதார் அணியக் கூடாதா? !

  ஜி.சாந்தகுமார்,

   தமிழக அரசு ஆசிரியைகள் சுடிதார் அணியக் கூடாதா என்கிற கேள்வி பலமாக எழுந்துள்ளது. ஆடைகட்டுபாடு குறித்து அரசாணை என்ன சொல்கிறது என்பதனை பார்ப்போம்.

    சமீபத்தில் சிதம்பரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவரை கல்வி அதிகாரி ஒருவர் பள்ளியில் வழக்கமான கண்காணிப்புக்கு வந்தபோது, அவர் அணிந்திருந்த சுடிதார் குறித்து கேள்வி எழுப்பியதாக முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். நான் சுடிதார் அணிந்து பள்ளிக்கு செல்வதால் கற்றல் அல்லது கற்பித்தல் நிகழ்வுகளில் எந்த இடையூறும் ஏற்படாத போது எதற்காக இதற்கு இவ்வளவு புகார் எழுகிறது என்பது போன்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். அதிலிருந்து ஒரு சில மாவட்டங்களில் இதே பிரச்னையை ஆசிரியர்கள் எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

   அரசு ஊழியர்கள் அலுவல் ரீதியாக என்ன உடை உடுத்த வேண்டும் என்பதில் பெரும் சந்தேகம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இதற்காகவே, கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

   அரசாணை 67 என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.

   ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்து அரசாணை உள்ளது. அதன்படி, பெண்கள் புடவை அல்லது சல்வார் கம்மீஸ் மற்றும் ஆண்கள் வேட்டி, சட்டை அல்லது ஃபார்மல் ஃபேண்ட் சட்டை அணியலாம் என்று வழிகாட்டுதல் உள்ளது.

    இந்த அரசாணை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும். ஆசிரியர்களும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, பாரம்பரிய உடைகளாக கருதப்படும் வேட்டி சட்டை, சேலையை தாண்டி சுடிதார் மற்றும் ஃபேண்ட் சட்டையை அணியலாம்

    சமீபத்தில் இரண்டு ஆசிரியைகளை சுடிதாரை மாற்ற சொல்லியும், மாற்றாவிட்டால் பொதுவில் மைக்கில் அறிவிக்க வேண்டி வரும் என்று பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கூறியிருக்கிறார்.

  ஆக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற பாரம்பரிய உடைகளை அவரவர் வசதிக்கு ஏற்ப அணிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.