ஏழு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
கு.அசோக்,
தூத்துக்குடியில் நடைபெற்ற ஏழாவது மாநில மாநாட்டின் தீர்மானங்களை வலியுறுத்தி இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏழு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அவை:அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ10 லட்சமும், உதவியாளர்களுக்கு ?5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும்.
ஓய்வுபெறும் போது மாதம் ரூ9,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மே மாதத்தில் ஒரு மாத முழு விடுமுறை வழங்க வேண்டும்.
பேஸ் கேப்ச்சர் முறையை எளிமைப்படுத்த வேண்டும்93% பதவி உயர்வு வழங்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

admin
