அக்காள் கணவருடம் ஓட்டம் பிடித்த பெண்!கண்ணை மறைத்த தகாத உறவு!

 அக்காள் கணவருடம் ஓட்டம் பிடித்த பெண்!கண்ணை மறைத்த தகாத உறவு!

உ.சசிகுமார்,

 அக்காவினுடைய கணவருடன் தகாத உறவிலிருந்த பெண் தற்போது அவருடனே ஓட்டம் பிடித்துள்ளார்.

   கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் பெயர் மாற்றப்பட்டுள்ளது. 40 வயதான இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு  திருமணம் நடந்தது. தற்போது இவரது மனைவி 7 மாத கர்ப்பமாக உள்ளார்.

   கணேசனின் மனைவி 32 வயதான தனது வயதான தனது தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.

   நீலாம்பூரில் உள்ள கோவிலில் அந்த திருமணம் நடந்தது.இந்தநிலையில், திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அதிர்ச்சி அடைந்த மணமகன் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

  அதேசமயம் மணப்பெண்ணின் அக்காள் கணவரான சந்திரனும் மாயமாகி இருந்தார். இதனால் சந்திரனுடன் தான் பொதுப்பெண் சென்று இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தினர்.

 2 பேருடைய செல்போன் எண்களின் டவர்களையும் ஆய்வு செய்தபோது அவர்கள் ஒரே இடத்தில் இருப்பது உறுதியானது. இதனையடுத்து 2 பேரையும் பிடித்து போலீசார் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

 புதுப்பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே தனது அக்காள் கணவரான சந்திரன் உடன் தகாத இருந்தது வந்தது.

  இவர்களது பழக்கத்தை அரசல் புரலசாக அறிந்த கணேசனின் மனைவி அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். மாப்பிள்ளை வீட்டுக்கு அரைமனதுடன் சென்ற புதுப்பெண் உடனே கணேசனை தொடர்பு கொண்டு எனக்கு வாழ பிடிக்கவில்லை உங்களுடன் சேர்ந்து இருந்து விடுகிறேன் என கூறி இருக்கிறார். கணேசனும் அதற்கு சம்மதம் தெரிவிக்க புகுந்தவீட்டை விட்டு 2 பேரும் உல்லாசத்துக்காக தப்பி ஓடியது தெரியவந்தது.