சிஐஎஸ்எப் பயிற்சி வீரர் குறி தவறி சுட்டதில் சிறுவன் கொலை!

தமிழன் ராஜா,
புதுக்கோட்டையில் சிஐஎஸ்எப்(மத்திய தொழில் பாதுகாப்பு படை) வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, சிறுவன் ஒருவனின் தலையில் குண்டு பாய்ந்தது.
இந்நிலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி இன்று (ஜன.03) உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு கடந்த 2021ம் ஆண்டு டிச. 30- ம் தேதி வீரர்கள் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்ட போது ஒரு போலீஸ்காரர் சுட்டதில் துப்பாக்கி குண்டு தவறுதலாக அருகிலுள்ள வீட்டில் பாய்ந்தது. இதில், வீட்டிலிருந்த கலைச்செல்வன், மகன் புகழேந்தி (வயது 11) என்ற சிறுவன் தலையில் குண்டு பாய்ந்தது அதில் அவன் படுகாயமடைந்தான்.
சிறுவன் புகழேந்தியை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அப்படியிருக்க ¢ சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி உயிரிழந்தான். வீரர் ஒருவர் குறி தவறி சுட்டதில் அப்பாவி சிறுவன் அநியாயமாக கொல்லப்பட்டான்.