ஒரு யூனிட் ஆற்று மணல் ஆயிரம் ரூபாய் மட்டுமே! சிசிடிவியும் உண்டாம்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
ஒரு யூனிட் ஆற்று மணல் விலையை ஆயிரம் ரூபாய் என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை பத்தாயிரம் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், மேற்படி விலை நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு தமிழக அரசே நேரடி விற்பனை செய்வது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மணல் விற்பனைக்கான புதிய விதிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
அதன்படி, பொதுமக்கள், ஏழை, எளியோ£ ¢எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மணலை எடுத்துச்செல்லுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள்பயன்பாட்டிற்கு முக்கியத்துவம்அளித்து காலை 8 மணி முதல்2 மணி வரை இணையதளம்மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல்2 மணி முதல்மாலை 5 மணி வரை மணல் இருப்பை பொருத்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூபாய் ஆயிரமாக நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏழை, எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு ஏதுவாக ஆற்று மணலின் அடிப்படை விலையை நிர்ணயம் செய்துள்ளதாகவும், பொதுமக்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆற்று மணல் விற்பனையை சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணிநேரமும் கண்காணித்தால் முறைகேடுகளை தடுக்கலாம் என்றும், குவாரிகளுக்கு டெண்டர் விடப்பட்டு மணல் அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்த நிலையில், ஆற்றுப்படுகையில் இருந்து மணலை எடுத்து பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.