திருப்பத்தூர் மற்றும் திருவாரூரில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்!

ஜி.கே.சேகரன், க.பாலகுரு,
திருப்பத்தூர் மற்றும் திருவாரூரில் திமுக ஊழல் அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி இந்திரா நகர். சக்தி நகர்.உள்ளிட்ட பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திமுக ஊழல் அரசை கண்டித்து நகர தலைவர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகளை நிறைவேற்று நகரம் தோறும் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ள சாலைகள் கழிவு நீர் கால்வாய் இல்லை சீர்படுத்திடுமின் கம்பங்களை முறையாக பராமரித்து அனைத்து மின்விளக்குகளையும் சீரமைத்திடு மின் வெட்டை தடுத்திடு மின் கட்டணத்தை குறைத்திடுக, டாஸ்மார்க் கடைகளை மூடு, கஞ்சா கள்ளச்சாராயம், விற்பனை அறவே ஒழித்திடு உணவுப்பொருள் பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை தடுக்காதே மத்திய மாநில அரசு திட்டங்களில் ஊழல் செய்யாதே பள்ளி கல்லூரிகளின் ஆசிரியர்கள் பணியிட ங்களை நிரப்பிடுஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்து உள்ளிட்டபத்து அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆம்பூர்,
இதே போன்று ஆம்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் , ஆம்பூர் நகர மன்ற உறுப்பினர் லட்சுமி பிரியா முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு கண்டித்து அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் வழங்கிட வேண்டும் எனவும், மணல் கொள்ளைகளை தடுக்க வேண்டும் எனவும், மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும், கஞ்சா போன்ற போதை பொருட்களை தடுக்க வேண்டும் என பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக கட்சியைச் சார்ந்த இருபத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம்
திருவாரூரில் திமுகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து மாவட்டங்களிலும் பஞ்சாயத்து வாரியாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக, தண்டலை ஊராட்சியில் விலமல் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் ஒன்றிய குழு சார்பில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்க தவறிய திமுக அரசை கண்டித்தும்.
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக வாக்குறுதி தந்து திமுக அரசு இப்போது பெரும்பான்மை பெண்களுக்கு உரிமை தொகை வழங்க மறுப்பதை கண்டித்தும்,விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக ஆட்சியை கண்டித்தும்,
டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும்,உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய தலைவர் முரளி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னிலையாக பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர், செந்தில் அரசன் ஜெகதீசன், ஜோதிமணி மற்றும் ஒன்றிய இளைஞரணி தலைவர் சுரேந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.