உருட்டு கட்டையால் இளைஞரை தாக்கிய திருநங்கைள்! பேருந்து நிலையத்தில் ஸ்டண்டு காட்சிகள்!

செங்கம்.சக்தி,
செங்கத்தில் திருநங்கைகளிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்த வந்துள்ளார் ஒரு இளைஞர். நேற்று அவர் கஞ்சா போதையுடன் மீண்டும் மாமுல் கேட்டதால்லவரை பேருந்து நிலையத்திற்குள் ஓட ஓட விரட்டி உருட்டு கட்டையால் தாக்கினார்கள், இதனால் பேருந்து நிலையத்துக்குள் பெரிய ஸ்டண்டு காடிகளை பார்க்க முடிந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் செங்கம் பகுதியில் உள்ள சுஜாதா என்ற திருநங்கையுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வரும் திருநங்கை சுஜாதாவிடம் கஞ்சா வாங்க விக்னேஷ் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்படியிருக்க அவர் சுஜாதா யாசகம் பெற்று வைத்துள்ள பணத்தை பிடிங்கி கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக அந்த இளைஞருடன் தொடர்பிலிருந்து பிரிந்து வந்த திருநங்கை சுஜாதா வழக்கம் போல் செங்கம் புதிய பேருந்து நிலையத்திற்குள் யாசகம் பெற்று கொண்டிருந்ததாகவும் கஞ்சா போதையில் வந்த விக்னேஷ் திருநங்கை சுஜாதாவிடம் பணம் கேட்டு மிரட்டிய தலைமுடியை பிடித்து இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனை கண்ட சக திருநங்கைகள் விக்னேஷை புதிய பேருந்து நிலைய வாளகத்திற்குள் உருட்டு கட்டையை எடுத்து கொண்டு ஓட ஓட அடித்து தாக்கினர்.
பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் கஞ்சா போதையில் இருந்த இளைஞரை மீட்டு செல்ல முயன்றனர். அப்போது போலீசாரின் கண்முன்னேயே விக்னேஷை திருநங்கைகள் தாக்கினர். அதை போலிசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகளுடன் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திருநங்கை ஒருவர் தன்னை நிர்வாணபடுத்திக் கொண்டு போலீசாரை சபிக்க தொடங்கினர்.
இதனால் பதறிப்போன போலிசார் உடனடியா கஞ்சா போதையில் இருந்த இளைஞரை மீட்டு செங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்த மட்டில் திருநங்கைகளின் அத்து மீறல் தொடர்ச்சியாக நடந்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு சம்பவம் ஏற்படும் போது அதை தடுக்கும் விதமாக செயலாற்றும் போலிசாரை கடமை செய்யவிடாமல் அருவறுக்கத்தக்கவாறு எதிர்கொள்கிறார்கள் திருநங்கைகள்.
இதற்கெல்லாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முடிவு கட்ட வேண்டும் என்பது பயணிகளின் அவா?