வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலை வழக்கு:- கத்தி சப்ளை செய்தவர் பிடிபட்டார்! மாவு கட்டு போடப்பட்டது!!

வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலை வழக்கு:- கத்தி சப்ளை செய்தவர் பிடிபட்டார்! மாவு கட்டு போடப்பட்டது!!

டி.முகமது இர்ஃபான்,

 வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் கவுன்சிலருமான வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் பாவம் அவர் வழக்கி விழுந்ததால் முழங்கை எலும்பு முறீந்து மாவு கட்டு போடப்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஜீவா நகர் பகுதியில் கடந்த மாதம் 10.09.2021 ஆம் தேதி சமூல செயற்பாட்டாளரும், முன்னாள் கவுன்சிலருமான வசீம் அக்ரம் என்ப்னவர் படுகொலை செய்யப்பட்டார்.

  இந்த வழக்கில் பட்டா கத்திகள் வாங்கி கொடுத்து உதவிய நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ஹாப்பி என்கின்ற ஜமீர் என்பவரை போலீஸார் தேடி வந்தனர்.

 இந்நிலையில் அவர்  வீட்டில் பதுங்கி இருப்பது குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதனஅடிப்படையில் போலீஸார் நேதாஜி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு போலிசார் சென்றனர். அதைக்கண்டு ஓடிய ஜ்மீர் ஓட்டம் பிடித்தாராம்.

 அப்படி அவர் ஓடியபோது தவறி விழுந்து கை முறிவு ஏற்பட்டதாம். அதனால் அவருக்கு மாவுகட்டு போடப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டாராம்.

 இந்த வழக்கில் இதுவரை 9 பேர் நீதி மன்றங்களில் சரணந்துள்ளனர். 12 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.