அவதூறு பேசியதற்காக பா.ஜ.க. தலைவர் கைது!

உ.சசிக்குமார்,
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவரை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் கலிவரதன். இவர் கட்சி சார்பில் விக்கிரவாண்டியில் நேற்று நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூட்டத்தில் பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசினார் என புகார் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, திருக்கோவிலூர் அருகே மனப்பூண்டி பகுதியில் இருந்த அவரை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்து விக்கிரவாண்டிக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.