''இந்திய இளைஞர்களிடையே ஃபுட்பால் பிளேயர் எம்பாப்பே சூப்பர் ஹீரோவா திகழ்கிறார்! பிரதமர் மோடி பிரான்சில் பேச்சு!

''இந்திய இளைஞர்களிடையே ஃபுட்பால் பிளேயர் எம்பாப்பே சூப்பர் ஹீரோவா திகழ்கிறார்! பிரதமர் மோடி பிரான்சில் பேச்சு!

து.சுரேஷ் ஜெயக்குமார்,

 உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான பிரான்ஸ் நாட்டின்¢ எம்பாப்பே குறித்து பேசிய பிரதமர் மோடி பெருமிதமாக பேசியிருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றடைந்த நிலையில் அவரை பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையம் வந்து வரவேற்றார்.

 இந்த வரவேற்பைத் தொடர்ந்து ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, இரவு 11 மணியளவில் இந்திய சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார். இதையடுத்து, பிரதமர் மோடி பிரான்சில் உள்ள எலிசி அரண்மனைக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடியை அதிபர் இம்மானுவல் மேக்ரான் மற்றூம் அவரது மனைவி பிரிகர் மேக்ரானும்முற்சாகமாக வரவேற்றனர்.

 அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் விருந்தளித்து கவுரவித்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை வழங்கினார். ராணுவ அல்லது சிவிலியன் கட்டளைகளில் இது மிக உயர்ந்த பிரான்ஸ் அரசின் கவுரவமாகும். இதனைப் பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

 இந்நிலையில் உலக புகழ் பெற்ற கால்பந்து வீரரான பிரான்ஸ் நாட்டின் எம்பாப்பே குறித்து மோடி அவர்களிடையே பெருமையாக பேசினார். எம்பாப்வே குறித்து பிரதமர் மோடி கூறுகையில் ''இந்திய இளைஞர்களிடையே எம்பாப்பே சூப்பர் ஹீரோவா திகழ்கிறார். எம்பாப்பே வை அனேகமாக பிரான்சைவிட இந்திய மக்கள் அதிகமானோருக்கு தெரிந்திருக்கலாம்'' என்றார்.

 பின்னர் பிரான்ஸ் வாழ் இந்திய மக்களிடையே உரையாற்றினார். அப்போது இந்தியாவின் வெற்றிகரமான பணபரிமாற்ற சேவை யுபிஐ-ஐ இனிமேல் பிரான்சில பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார். இந்தியா- பிரான்ஸ் யுபிஐ- பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். பிரான்சின் ஈபிள் டவரில் இருந்து இந்த முறை தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலா செல்லும் மக்கள் கையில் பணத்துடன் செல்ல வேண்டாம். யுபிஐ- பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம். இந்தியாவின் யுபிஐ- பல வங்கி கணக்குகளை சிங்கிள் மொபைல் அப்ளிகேசன் மூலம் எளிதாக கையளாமுடியும் என்று பேசினார்.