ஆஃபர் புடவைக்காக மோதிக்கொண்ட பெண்கள்

ஆர்.செல்வராஜ்,
கர்நாடக மாநிலத்தி தேர்தல் பரபரப்பு உள்ள நிலையில் தலை நகர் பெங்களூரூவில் ஆஃபர் விலை புடவைக்காக பெண்கள் மோதிக்கொண்டனர்.
பெங்களூரு, மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்த துணிக்கடை ஒன்றில் ஆண்டு விற்பனையை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதை அடுத்து புடவை வாங்க வந்த ஒரே புடவ்ய்யை இரு பெண்கள் செலக்ட் செய்ததால் அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது.
அதுவே வாக்குவாதமாக மாறி சண்டையில் முடிந்தது.
இரு பெண்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்த போதிலும், அங்கு வந்தவர்கள், அதனை பொருட்படுத்தாமல், புடவை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தினர். கடையில் காவலராக பணியாற்றி வருபவர் மட்டும் பெண்களிடையே ஏற்பட்ட சண்டையை தடுக்க முயன்றும் தோற்றார்.
ஆனால் அந்த கடையில் பிசினஸ் கனஜோராக நடந்துக் கொண்டிருந்தது.