நடிகர்களை நம்பி அரசியலுக்கு வந்தவர்கள் காணாமல் போனார்கள்! எ.பி.தம்பிதுரை ஆவேசம்!

நடிகர்களை நம்பி அரசியலுக்கு வந்தவர்கள் காணாமல் போனார்கள்! எ.பி.தம்பிதுரை ஆவேசம்!

  ஜி.கே.சேகரன்,

நடிகர்களை நம்பி அரசியலுக்கு வந்தவர்கள் காணாமல் போனார்கள் என மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை பேச்சு.

  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆய்வு செய்தல் மற்றும் ஆலோசனை கூட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைப்பெற்றது.

   இதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினரும், பூத் கமிட்டி திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளருமான மு.தம்பிதுரை கலந்து கொண்டு பூத் கமிட்டி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

  அப்போது பேசிய மு.தம்பிதுரை தேர்தல் நேரத்தில் மட்டும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக கூறுகின்றனர்.எம்.ஜி.ஆர் அவர்கள் வேறு மற்ற நடிகர்கள் வேறு. நடிகர்களை நம்பி அரசியலுக்கு வந்தவர்கள் இன்று காணாமல் போய் உள்ளனர் என பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

   திமுகவில் கலைஞர் தொடங்கி தற்போது ஸ்டாலின் வரை குடும்ப ஆட்சி நடைப்பெற்று வருகிறது.இந்தியாவில் குடும்ப ஆட்சி நடத்திய காங்கிரஸ் இன்று காணாமல் போய் விட்டது.

  திமுகவும் என்ற கட்சியும் விரைவில் காணாமல் போகும் எனவும், தமிழகத்தில் குடும்ப ஆட்சியையும் ,ஊழலை ஒழிப்பது மட்டுமே அதிமுகவின் நோக்கம் என தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன்,ஜோலார்பேட்டை நகர செயலாளர் எஸ்.பி.சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட,நகர, ஒன்றிய, பேரூராட்சி அதிமுக பொறுப்பாளர்கள்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.