கொலையாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய வேலூர் நீதிமன்றம்!

கொலையாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய வேலூர் நீதிமன்றம்!

  கு.அசோக்,

  காட்பாடியில் பஸ் ஸ்டாப்பில் தூங்கிய நபரை கொலை செய்த கொலையாளிக்கு ஆயுள் தண்டனை வேலூர் விரைவு  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது,

 வேலூர்மாவட்டம்,காட்பாடியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள பஸ் ஸ்டாப்பில் தானனந்த கிரி என்ற சாமியார் தூங்கி கொண்டிருந்தா£.¢ அப்போது அவரை பாபு அகமது ஷேக் என்பது தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். 

  பின்னர் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாமியாரை கொலை செய்த பாபு அகமது ஷேக் என்பவருக்கு நீதிமன்ற ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறைதண்டனையும் வழங்கி நீதிபதி பி.ரேவதி பரபரப்பான தீர்ப்பை வழங்கினார்.

  இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக திரு.K.சம்பத் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில் குற்றவாளி பாபு அகமது ஷேக் வேலூர் மத்திய சிறைக்கு பாதுகாப்பு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்