டூவீலரில் கஞ்சா சப்ளை!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 எதிரிகள் கைது - 300 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள், ரொக்க பணம் ரூபாய் 21,000/- மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. வசந்தராஜ் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மேரி ஜெமிதா தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. பழனிச்சாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகளை பரும்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் பேட்மா நகரம் பகுதியை சேர்ந்த இமாம் தீன் மகன் ஷேக் ஜாபர்அலி (26) மற்றும் சிவகளை பரும்பு பகுதியை சேர்ந்த மாரிமோகன் மகன் பிரபாகரன் (32) என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகளான ஷேக் ஜாபர்அலி மற்றும் பிரபாகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள், ரொக்க பணம் ரூபாய் 21,000/- மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி பிரபாகரன் மீது ஏற்கனவே ஏரல் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.