டுபாக்கூர் பட்டாசு விற்பனை! ஆன்லைன் நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தல்!

டுபாக்கூர் பட்டாசு விற்பனை! ஆன்லைன் நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தல்!

ஜி.சாந்தகுமார்,

 ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதாக சில டுபாக்கூர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அதை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் செய்திருப்பதுடன், இது குறித்து புகார் தெரிவிக்க, போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைய்தும் வெளியிட்டிருக்கிறார்கள்.  நவ.12-ம்தேதி தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனைகளும், இனிப்பு மற்றும் ஜவுளி விற்பனைகள் களைகட்டியிருக்கின்றன. இதில் பெரும்பாலோனோர், கடைவீதிக்கும் போய் இவற்றை வாங்காமல் ஆன்லைனில் ஆர்டர் செய்தும் வாங்கி வருவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

   இதைவைத்து சில டுபாக்கூர்கள் கல்லாகட்டிவருகிறார்கள். குறைந்த விலையில் தீபாவளி பட்டாசு விற்பதாக கூறி, போலி இணையதளம் மூலம் மோசடி நடைபெறுவதாக அதிக அளவில் புகார்கள் குவிகிறதாம்.

  ஆகவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், மர்ம நபர்கள் சிலர் போலி இணையதங்களை உருவாக்கி, குறைந்த விலையில் பட்டாசு வழங்குவதாக விளம்பரம் செய்து மோசடி செய்கின்றனர். இதுதொடர்பாக மர்ம நபர்கள் யூடியூப்உள்ளிட்ட சமூக வலைதளபக்கத்தில் விளம்பரப்படுத்துகின்றனர்.

   செல்போனில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, வாட்ஸ் அப் மூலம் பட்டாசு ஆர்டரை பெறுகின்றனர். இதற்காக ஆன்லைன் மூலம் பணத்தை பெற்றுக் கொண்டு, பின்னர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுகின்றனர்.

இதுபோன்ற மோசடி தொடர்பாக, கடந்த ஒரு மாதத்தில் 25 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.

  ஆகவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த வகையில் பொதுமக்கள் யாரேனும் பணத்தை இழந்திருந்தால், சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in  என்ற இணையதளம் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.