தேசபக்தி இளைஞர் மன்றம் சார்பில் கொடியேற்றிய அப்புபால் பாலாஜி!

த.நெல்சன்
நாட்டின் 74 வது குடியரசு தினவிழாவையொட்டி அரசு தரப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கொடியேற்றி கொண்டாடிவருகிறார்கள்.
இந்நிலையில் தேசபக்தி இளைஞர் மன்ற கவுரவ தலைவரும், அம்மா தொண்டு நிறுவன நிறுவனவரும், அ.தி.மு.க.மாநகராட்சி செயலாளருமான வி.எம்.பி.அப்புபால் பாலாஜி அவர்கள் கொடியேற்றி வைத்தார்.
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள திரொளபதி அம்மன் கோவில் மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகளை தேசபக்தி இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் மன்றத்தின் தலைவர் கணேஷ், செயலாளர் கலையரசன் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர்.