மீண்டும் தலை தூக்கும் கஞ்சா சாக்லேட்!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
சூலூர் பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதும் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தவர் நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், போதை பொருள் தடுப்பு பணிகளை சம்மந்தப்பட்ட போலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சூலூர் சிந்தாமணிபுதூர் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சிந்தாமணிபுதூர் (ருத்ரா பேக்கரி) பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த பாம்போலா சதா மகன் தில்சனாத் சதா (30) மற்றும் ராம் வினோ சதா மகன் ராஜ்குமார் (29) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து ரூ.35,000/- மதிப்புள்ள 4.950 கிலோ கிராம் எடைகொண்ட 880 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.