ஆசிரியரை வெட்டிய மாணவர்கள் தப்பி ஓட்டம்!

ஆசிரியரை வெட்டிய மாணவர்கள் தப்பி ஓட்டம்!

  கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 அய்யா என் மவன் நல்லா படிக்கலைன்னாலோ, கீழ்படியலைன்னாலோ கண்ணை மட்டும் விட்ருங்க, தோலை உறிச்சிடுங்க என்று 90 ஸ் கிட்டுகளை பள்ளியில் சேர்க்கும் போது ஆசிரியரிடம் பெற்றோர் கூறியது நினைவிருக்கலாம்.  ஆனால் அதெல்லாம் தற்போது தலை கீழாக மாறிவிட்டது.

 ஆசிரியர் மாணவரை அடித்தால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது நடைமுறையில் உள்ளன.

 அந்த கதையும் இப்போது மாறிவருகிறது, ஆம் ஒரு சில மாணவர்கள் ஆசிரியரை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

 அப்படித்தான் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டி அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்கள். திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியியில் பொருளாதார துறை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்,  11-ம் வகுப்பு மாணவர்கள் இருவரை படிக்கும்படி கண்டித்துள்ளதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் இருவரும் ஆசியரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுவதி எடுத்துக்கொண்டார்.  தப்பி ஓடிய மாணவர்களை போலீசார் தேடிவருகின்றனர். அதற்காக தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.