மாநில அரசின் அறிவுரைகளை ஏற்று வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் ஆளுநர் அறிக்கை!

மாநில அரசின் அறிவுரைகளை ஏற்று வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் ஆளுநர் அறிக்கை!

ஜி.சாந்தகுமார்,

 பொதுமக்கள் மாநில அரசின் அறிவுரைகளை பின்பற்றி  பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார்.

 தமிழ்நாட்டில் அனைத்து விஷயங்களுக்கும் கவுன்ட் கொடுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது மழை புயலுக்காக ஒரு செம அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

 அவர் வெளியிட்ட அறிக்கையில் "மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும். அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியிலும் மத்திய. மாநில அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

 இந்த நிலைமையை மத்திய அரசும், மாநில அரசும் உயர்மட்ட அளவில் கண்காணித்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

 எனவே மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.