அதிமுக தேர்தலில் முறைகேடு எனில் ரத்து செய்யப்படும்! நீதிமன்றம் எச்சரிக்கை!

ம.பா.கெஜராஜ்,
அதிமுக தலைமை தேர்தலில் முறைகேடு நிரூபிக்கப்பட்டால் தேர்தலை ரத்து செய்ய நீதிமன்றம் தயங்காது என நீதிபதி தெரிவித்தார்.
அ.தி.மு.க. தலைமைக்கான தேர்தல் டிசம்பர் ஏழாம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அதை எதிர்த்து முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் கேட்டுக் கொண்டதோடு, இதை அவசர வழாக்காக கருத வேண்டும் எனவும் கோரினார்.
அவரது மனுவின்படி அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
ஆகவே இன்று மதியம் விசாரணை நடைபெற்றது. அப்போது அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட கே.சி.பழனிசாமி வழக்கு தொடர உரிமை இல்லை என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட உயர் நீதிமன்றம், இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக நிரூபிக்கப்பட்டால் தேர்தலை ரத்து செய்ய நீதிமன்றம் தயங்காது என நீதிபதி தெரிவித்தார்.
மேலும் அ.தி.மு.க.தலைமைக்கான தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக மொத்தம் கேசிபழனிச்சாமி மனு புஸ்.... ஆகிவிட்டது!