வானியம்பாடி திமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்:-கவுன்சிலர் சாரதிகுமாரின் ஆதரவாளர்கள் அராஜகம்!!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி நகர மன்ற துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக கவுன்சிலர் தேர்தலை புறக்கணித்து வெளிநடப்பு, காவல்துறையினர் முன்னே திமுக நிர்வாகியை சரமாரியாக தாக்கிய நகர செயலாளர் சாரதிகுமாரின் ஆதரவாளர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர மன்ற துணைத் தலைவராக இருந்த அப்துல்லா என்பவர் 07:05:22 அன்று உடல்நலக்குறைவால் இறந்து விட்ட நிலையில், அதற்கான இடைத்தேர்தல் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது தேர்தல் முறையாக நடைபெறாததால் அதிமுக.36 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஜஹீர் தேர்தலை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.
இதற்கிடையில் தேர்தல் நடைபெறும் நகராட்சி அலுவலகம் முன்பாக நியூடவுன் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி சதீஷ்குமார் என்பவரை, வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதிகுமாரின் ஆதரவாளர்கள் 20 கக்கும் மேற்பட்டோர் நடுரோட்டில் காவல்துறையினரின் கண்முன்னே சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கினர்.
இதனால் படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகரமன்ற துணைத்தலைவர் இடைதேர்தலின் போது காவல்துறையினரின் கண் முன்னே நடுரோட்டில் திமுக நிர்வாகியை திமுகவினரே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.