நக்சல்கள் தாக்குதலில் துணை ராணுவத்தினர் 11 பேர் பலி!

ரவி.ஜார்ஜ்,
சத்தீஸ்கர் மாநிலம், தந்தேவாடா மாவட்டத்தில், மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவ படையைசேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர்.
அரன்பூர் அருகே டிஆர்ஜி பணியாளர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்ட்டுகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில், துணை ராணுவப்படையை சேர்ந்த 11 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாதல் இரங்கல் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் வீரர்கள் இறந்தது வருத்தமளிக்கிறது என பூபேஷ் பாதல் தெரிவித்துள்ளார். மேற்கண்ட பகுதியில் பல காலமாக நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்ற நக்சல்கள் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து ஆயுதமேந்திய கிளர்ச்சியை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.