தோல் கழிவு நீரால் அவதிப்பட்டு வரும் பேர்னாம்பட்டு பொதுமக்கள்!

தோல் கழிவு நீரால் அவதிப்பட்டு வரும் பேர்னாம்பட்டு பொதுமக்கள்!

ஜி.கே.சேகரன்,

 பேர்ணாம்பட்டு அருகே தோல் கழிவு நீரால் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் - சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்கள்,

 வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சுற்றுவட்டாரப்  பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

 மேற்படி தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர்களை பேரணாம்பட்டு பகுதியில் உள்ள  சுத்திகரிக்கப்படும் நிலையத்தில் கொடுத்து சுத்திகரிக்கப்பட வேண்டும்.

 இந்த கழிவு நீர்களை சுத்திகரிக்கப்படும் நிலையத்திற்கு அனுப்பி சுத்தப்படுத்துவதற்கு தோல் தொழிற்சாலை  முதலாளிகள்  பணம் செலுத்த வேண்டும்.

 இதனால் பல லட்சம் ரூபாய் செலவு ஏற்படுவதால் தோல் தொழிற்சாலை நடத்தும் உரிமையாளர்கள் அருகே இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவு நீரோடு இரவு நேரங்களில் கலந்து விடுகின்றனர்.

 இதனால் பேரணாம்பட்டு, ரஹ்மதாபாத் பகுதியில் வசிக்கும் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  துர்நாற்றம், மூச்சுத்  திணறல் போன்றவையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

 மேலும், இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தோல் தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுநீரை கால்வாயில் விடும் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.