நான் பா.ஜ.க.என்பதால் வார்டு மக்களை திமுக புறக்கணிக்கிறது! கவுன்சிலர் பரபர குற்றச்சாட்டு!!

நான் பா.ஜ.க.என்பதால்  வார்டு மக்களை திமுக புறக்கணிக்கிறது! கவுன்சிலர் பரபர குற்றச்சாட்டு!!

 ஜி.கே.சேகரன்,

 ஆதிபெரமனூர் ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி கவுன்சிலர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்! திமுக மாவட்ட குழு தலைவர் தடுப்பதாக குற்றச்சாட்டு.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த 14 ஆவது வார்டு அதிபெரமனூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனக் கூறி பாஜகவை சேர்ந்த கவுன்சிலர் குருசேவ் நூற்றுக்கும் மேற்பட்டோரை திரட்டி நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

 அதில் முக்கிய கோரிக்கைகளாக பலமுறை கோரிக்கை வைத்தும் அதி பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் இதற்கு சுற்றுச்சுவர் இல்லாமல் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.

 ஆகவே சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், அங்கன்வாடி அமைக்க வேண்டும்.மேலும் கழிவு நீர் கால்வாய் குடிநீர் வசதி திருவிளக்கு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறது.இதனை சரி செய்ய வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தார்.

  ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கவுன்சிலர் குருசேவ் அப்பகுதி மக்களுடன் இன்று நாட்டாறம்பள்ளி பேரூராட்சி அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

  மேலும் தான் பிஜேபி யைச் சார்ந்தவன் என்பதால் தங்களுடைய தொகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனவும், இதற்கு முழு காரணம் திமுகவைச் சேர்ந்த மாவட்ட குழு தலைவர் சூரியகுமார் தான் முழு காரணம் என குற்றம் சாட்டினார்.

  இதேபோல் தங்கள் தொகுதிக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் தொடர்ந்து அவலம் நீடிக்குமானால் மாநிலத் தலைவர் அண்ணாமலையை வரவைத்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.அதன் பின்னர் பேரூராட்சி இளநிலை அலுவலர் சீதாராமனிடம் தங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுவை கொடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.