சாமியோவ் வூடு கொடு சாமியோவ்! நரிக்குறவர்கள் முதல்வருக்கு வீடியோ!!

  கு.அசோக்,

  இராணிப்பேட்டை மாவட்டம், வாலாசா வட்டம், இரத்தினகிரி, கீழ்மின்னல் கிராமத்தில் ரோட்டில் தங்கி குடும்பம் நடத்திவருகிறார்கள் நரிக்குறவர்கள்.

 சுமார் ஐந்து தலைமுறைகளாக சாலைகளில் வாழும் இவர்கள் வீடு வேண்டி மனு கொடுத்தும் இவர்களை ஏனோ அரசுகள் கண்டுகொள்ளவில்லை.

 கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு மழையில் அலைந்து திரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

 உறங்கக்கூட இடம் இல்லாமல் அலையும் பரிதாப நிலையில் உள்ள அவர்கள் கடைகளின் ஓரம் தங்க சென்றாலும் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

 இந்த சூழலில் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து மேற்படி நரிக்குறவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.