யூடியூப்பில் நேரலை செய்த நபரை காளை முட்டி களேபரம்!

யூடியூப்பில் நேரலை செய்த நபரை காளை முட்டி களேபரம்!

கு.அசோக்,

wish you the happy ramalan

 வாணியம்பாடி அருகே நடைப்பெற்ற எருது விடும் விழாவை யூடியூப்பில் நேரலை செய்த நபரை காளை மாடு முட்டி தூக்கியது.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் எருது விடும் விழா நடைப்பெற்றது. இந்த எருது விடும் விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் குப்பம், வீரணமலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

 கால்நடை மருத்துவர்களின் உரிய பரிசோதனைக்கு பிறகு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.குறிப்பிட்ட எல்லையை குறைந்த நேரத்தில் கடந்த காளையிற்கு முதல் பரிசாக 77ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 55 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 45 ஆயிரம் ரூபாய் என பல பரிசுகள் வழங்கப்பட்டது.

 இந்த எருது விடும் விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர் இந்த எருது விடும் விழாவிற்கு பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

  மேலும் இந்த எருது விடும் விழாவை சமூக வலைத்தளமான யூடியூப்பில் நேரலை செய்துகொண்டிருந்த நபரை போட்டியில் பங்கேற்று ஓடிய காளை முட்டிய தூக்கியது.

 பரபரப்பாக பேசி லைவ் செய்துக் கொண்டிருந்தவரை காளை களேபரம் செய்த நிகழ்வு எருது விடும் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.