காலல் கழுத்தை மிதித்து தந்தை கொலை!

ஜி.கே.சேகரன்,
wish you the happy ramalan
நாட்றம்பள்ளி அருகே காலல் கழுத்தை மிதித்து தந்தை கொலை செய்யப்பட்டதுடன், கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்து தாயார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மகனை நாட்றம்பள்ளி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி, பச்சூர் பகுதியைச் சேர்ந்த மோகன் (55) இவருடைய மனைவி வளர்மதி (50)இவர்களுக்கு திருமணம் ஆகி கிரி (32) முத்து(28) சந்தியா(20) என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இரண்டாவது பிள்ளையான முத்து ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் கடந்த மூன்று மாதங்களுக்கு காதல் தோல்வியால் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடந்ததாக தெரிகிறது.
ஆகையால் அவர் சற்று மனநலம் குன்றிய நிலையில் இருந்தாராம்.
அப்படியிருக்க முத்து உடல்நிலை சரியில்லாத இருந்த தந்தையான மோகனை கழுத்தின் மீது கால் வைத்து மிதித்து கொலை செய்துள்ளார்.
இதனை தடுக்க சென்ற தாயார் வளர்மதி மற்றும் தங்கை சந்தியா ஆகிய இருவரையும் கட்டையால் சரமாரியாக தலையில் தாக்கியுள்ளார். இதன் காரணமாக இருவரும் இருவரும் வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் முத்துவை கை கால்களை கட்டி வைத்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் முத்துவை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர் தந்தையை கொலை செய்து தாயாரை கொலை செய்யும் அளவிற்கு மகன் கட்டையால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.