டாஸ்மாக் கடையை மாற்ற கோரி மறியல் - பரபரப்பு!

டாஸ்மாக் கடையை மாற்ற கோரி மறியல் - பரபரப்பு!

 கு.அசோக்,

wish you the happy ramalan

 குடியாத்ததில் குடியிருப்பு பகுதி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கூறி கடை முன் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 வேலூர் மாவட்டம், குடியாத்தம், சந்தப்பேட்டை அருகே குடியிருப்பு பகுதியில் சாலையின் அருகே தமிழக அரசின் மதுபான டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

 இந்நிலையில் சந்தப்பேட்டை - கோபாலபுரம் இணைக்கும் ஒரு வழி பாதையில் இந்த மதுபான கடை இயங்கி வருவதால் மது பிரியர்கள் மதுவை வாங்கி சாலையில் நின்று மது அருந்திவிட்டு போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

 இதனால் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.  ஆகவே அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் சேர்ந்து டாஸ்மாக் கடை அருகே தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   தகவல் அறிந்து வந்த குடியாத்தம் போலிசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கடையை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். டாஸ்மாக் கடை முன் குவிந்த பொதுமக்களால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.