சூப்பராக சமாளித்த காட்பாடி ஸ்டேஷன் மாஸ்டர்! கோவை எக்ஸ்பிரஸிக்கு பதில் சகாப்தி!

கு.அசோக்,
அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு 4 மின்சார ரயில்கள் காலதாமதம் .ரயில் பயணிகள் ஸ்டேஷன் மாஸ்டர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று காலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக காலை 5.40 மற்றும் 6.10 மற்றும் 6.40, 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டது.
அதேபோன்று சென்னையில் இருந்து அரக்கோணம் திருத்தணி மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்களும் கால தாமதமாக இயக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் பயணித்தனர்.
அவர்களும் இதில் பாதிக்கப்பட்டனர்.
ரயில் பயணிகள் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிக்க முடியாத ஆத்திரத்தில் அரக்கோணம் ஸ்டேஷன் மாஸ்டரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதே நேரம் விரைவு ரயில்கள் எந்தவித காலதாமதம் இன்றி இயக்கப்பட்டது.
இந்நிலையில் அரக்கோணத்தில் இருந்து செல்ல வேண்டிய பயணிகள் கோவை எக்ஸ்பிரஸை தவற விட்ட நிலையில் அவர்கள் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
அந்த ரயில் அரக்கோணத்தில் நிற்காமல் செல்லும் வண்டி என்றாலும் கூட சூழ்நிலையைக் கருதி ஸ்டேஷன் மாஸ்டர் துரித நடவடிக்கை எடுத்து பிரச்சனையை சமாளித்தார்.