கலெக்டருக்கு வந்த ஒரு ரகசிய கடிதம்! சிறை சென்ற உதவி தலைமை ஆசிரியர்!

கலெக்டருக்கு வந்த ஒரு ரகசிய கடிதம்! சிறை சென்ற உதவி தலைமை ஆசிரியர்!

கு.அசோக்,

 பேரணாம்பட்டு அருகே அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர்  பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார் - வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலியல் தொல்லை செய்த உதவி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு.

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா மலைக் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.

  இங்கு ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

  இந்தப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் உதயகுமார் என்பவர் மாணவ மாணவிகளிடம் கடுமையாக அடித்து துன்புறுத்தி நடந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது.  மேலும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளிடம் உதவி தலைமை ஆசிரியர் உதயகுமார் சில்மிஷமாக நடந்து கொள்வதும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதாகவும் மாணவிகள் கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளனர்.

 இதனை அந்த கிராமத்தில் உள்ள சில ஊர் பெரியவர்களுக்கு தெரியவந்து மாணவிகளின் பெற்றோர்களை வைத்து மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

 அதன் அடிப்படையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குடியாத்தம் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் மாணவிகளிடம் விசாரணை நடைபெற்றது.

 அதனைத் தொடர்ந்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் பாஸ்மார்பெண்டா கிராமத்திற்கு சென்று மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் விசாரணை செய்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து உதவி தலைமை ஆசிரியர் உதயகுமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

  அப்படியிருக்க  முதன்மை கல்வி அலுவலர் மணிமொழியின் உத்தரவின் பேரில் உதவி தலைமை ஆசிரியர் உதயகுமாரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.