முன் விரோதம் காரணமாக வெட்டு குத்து!

முன் விரோதம் காரணமாக வெட்டு குத்து!

ஜி.கே.சேகரன்,

முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு அரிவாள் வெட்டு, படுகாயங்களுடன் இளைஞர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அல்லி என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  அப்படியிருக்க,  மீண்டும் முருகன் மற்றும் அல்லியிடையே  தகராறு ஏற்பட்டது.  அப்போது அல்லி தான் வைத்திருந்த அரிவாளால், முருகனை சரமாரியாக வெட்டியுள்ளார், இதில் முருகன் படுகாயமடைந்த நிலையில், அவரை மீட்ட அங்கிருந்த இளைஞர்கள், சிகிச்சையிற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் கொண்டுச் சென்றனர்.

 பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்க்கொண்டார்.

  இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் அரிவாளால் வெட்டிய சம்பவம்  வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.