குண்டு ஒன்னு வச்சிருக்கேன்...வசமாக மாட்டிய 59!

குண்டு ஒன்னு வச்சிருக்கேன்...வசமாக மாட்டிய 59!

 உ.சசிகுமார்,

 சென்னைக்கு புறப்பட்ட இருந்த ஐதராபாத் விமானத்தில் வர இருந்த 59-வயதான பயணி தாமதமாக வந்ததால் விமானத்தில் செல்ல விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.

    இதனால், விமான நிலைய அதிகாரிகளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அந்த பயணி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

   விமான நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவன் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டியுள்ளான். இதனால், பதறிப்போன அதிகாரிகள் உடனடியாக சென்னை புறப்பட இருந்த விமானத்திற்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை விமானத்தில் இருந்து இறக்கி விட்டனர். தொடர்ந்து விமானம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றது. சோதானையில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபர் குறித்த விவரங்களை போலீசார் திரட்ட தொடங்கினர். தொலைபேசி எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபர் இருக்கும் இடம் பற்றிய விவரங்களை போலீசார் கண்டறிந்தனர்.

  அந்த நபரை பிடித்து வெடி குண்டு மிரட்டல் விடுத்தது ஏன் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஐதரபாத்தில் இருந்து சென்னைக்கு வர இருந்த அதே விமனாத்தில் அந்த நபரும் டிக்கெட் புக் செய்து இருந்தாராம். ஆனால், விமான நிலையத்திற்கு உரிய நேரத்தில் அந்த நபரால் வர முடியவில்லை. தாமதமாக வந்ததால் விமான நிலைய அதிகாரிகளும் விமானத்தில் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த அந்த பயணி விமானத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசிடம் சொல்லியிருக்கிறார்.

  59-வயதான அந்த பயணியை போலீசார் கைது செய்தனர்.