அரசு சம்பளதாரர்களுக்கு குஷி பட்ஜெட்!

அரசு சம்பளதாரர்களுக்கு குஷி பட்ஜெட்!

ம.பா.கெஜராஜ்,

  நாட்டில் 75 வது பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

  இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக உலகமே அங்கீகரித்துள்ளது, உலகமே பாராட்டுவதால் தலைநிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறேன் என்று 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நீதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

  பட்ஜெட் பற்றின சில முக்கிய விவரங்களை உங்கள் "லைவ் லுக்" புரியும்படியாக வெளியிட்டுள்ளது வாசித்து அறிந்துக் கொள்ளவும்.

 உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு 2 லட்சம் கோடி ஒதுக்கீடு

 உலக நாடுகள் பொருளாதாரத்தில் தங்கியுள்ள நிலையில் இந்தியா பொருளாதாரத்தில் வலுவான நிலையில் உள்ளது

வரும் நிதியாண்டில் விவசாய கடன் வழங்க 20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

  மீனவர் நலனுக்காக 6000 கோடி ஒதுக்கீடு

உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

 கால்நடை வளர்ப்பு, மீன் வளத்துறைக்கு ரூ20 லட்சம் கோடி ஒதுக்கீடு

 வரும் நிதியாண்டில் 157 செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும்

 நாடு முழுவதும் 50 புதிய  விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும்

 - பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா விளங்குகிறது.

 சுதந்திர இந்தியாவின் 75வது  பட்ஜெட்டில் உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்திய பொருளாதார உள்ளது. 

பெண்கள், இளைஞர்கள், தொழில்துறை, விவசாயிகளுக்கான பட்ஜெட் இது.

  சர்வதேச சக்தியாக இந்தியா உயர ஆதரவு அளிப்பதே எங்கள் விருப்பம்:

கடந்த 2013-14ம் ஆண்டை ஒப்பிடும்போது ரயில்வே துறைக்கு 9 மடங்கு அதிகமாக நிதி - ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு"

பிரதமரின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திறன்படுத்தப்படுவர்

பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் அமைக்கப்படும்

ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட வைரங்களுக்காக, சுங்கவரி குறைக்கப்படும்

"இளைஞர்களின் திறனை வளர்க்க நாடு முழுவதும் 30 சர்வதேச தரத்தில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்"

5ஜி சேவைகளுக்கான செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும்

மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி

நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு 10,000 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்து துறைக்கு 75,000 கோடி ஒதுக்கீடு

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு "ரூ. 7 - 9 லட்சம் வரை ஈட்டுபவர்களுக்கு 5% வரி;

ரூ12 - 15 லட்சம் வரை வருமானம் இருப்பவர்களுக்கு 15% வரி"

"ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 30% வரி செலுத்த வேண்டும்"

"ரூ. 3 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு எந்த வரியும் கட்டத் தேவையில்லை"

அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

 பசுமை எரிசக்தி மேம்பாட்டுக்கு ரூ. 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

உட்கட்டமைப்பு,  திறன் மேம்பாடு, பசுமை வளர்ச்சி, இளைஞர் நலன், இவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்.

இது சிறந்த பட்ஜெட்டாகவும், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆதரவான பட்ஜெட்டாகவும் இருக்கும்

   நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு சென்டர்கள் நிறுவப்படும்

மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி.

   வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை

"சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவினரை மேம்படுத்துவதற்காக ரூ. 9000 கோடி ஒதுக்கீடு

"சிறு, குறு தொழில்களுக்கான கடன் வட்டியை 1 சதவீதமாக குறைக்க நடவடிக்கை"

பெண்கள் 7.5% வட்டி விகிதத்தில், 2 லட்சம் வரை சேமிப்பதற்கான புதிய சேமிப்பு திட்டம் கொண்டுவரப்படும்

 மகிளா சம்மான் என்ற புதிய சேமிப்பு திட்டம் உருவாக்கப்படும்.

பெண்களின் பெயரில் இரண்டு ஆண்டுகள் சேமிப்பு செய்யும் வகையில் 7% வட்டி வழங்கப்படும்

10,000 கோடி முதலீட்டில் பசு மற்றும் அதுசார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

சர்வதேச சக்தியாக இந்தியா உயர ஆதரவு அளிப்பதே எங்கள் விருப்பம்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு

 புதிய வரிமுறையில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு மொத்த வருமானம் 7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என பட்ஜெட்டில் அறிவிப்பு ஏற்கனவே 5 லட்சம் வரை இருந்த வரம்பு தற்போது ஏழு லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

 உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ?2 லட்சம் கோடி ஒதுக்கீடு

 உலக நாடுகள் பொருளாதாரத்தில் தங்கியுள்ள நிலையில் இந்தியா பொருளாதாரத்தில் வலுவான நிலையில் உள்ளது

வரும் நிதியாண்டில் விவசாய கடன் வழங்க 20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

வரும் நிதியாண்டில் 157 செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும்

இனி புதிய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் வருகிறது.

3 லட்சம் வரை - வரி இல்லை

3 முதல் 6 லட்சம் வரை - 5% வரி

6 முதல் 9 லட்சம் வரை - 10% வரி

9 முதல் 12 லட்சம் வரை - 15% வரி

12 முதல் 15 லட்சம் வரை - 20% வரி

15 லட்சத்துக்கு மேல் - 30% வரி

இதனால் வருமான வரி குறைய வாய்ப்பு உண்டு.

ஏப்ரல் 1 முதல் பிணையில்லா கடன்

ஏப்ரல் 1 முதல் சிறுகுறு தொழில்களுக்கு பிணையில்லா கடன்கள் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

47 லட்சம் இளைஞர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்;

1 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்; வங்கி சேவை தொடர்பான சட்டங்கள் எளிதாக்கப்படும்;

இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க 30 மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால், இதில் கவர்ச்சிகரமான அம்சங்களுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அம்சகள் இடம்பெற்றுள்ளன.