பேடிஎம் - க்கு ரிசர்வ வங்கி தடை!

பேடிஎம் - க்கு ரிசர்வ வங்கி தடை!

 ஜி.சாந்தகுமார்,

இந்தியாவில் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் சேவைகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வந்ததால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 இந்த உத்தரவின் மூலம் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் பணத்தை போடுவது, கடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, பிரீபெயிட் சேவைகள், வாலெட்டுகள், ஃபாஸ்டேக் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது.

 வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஃபாஸ்டேக், சேமிப்பு அக்கவுண்ட், நடப்பு அக்கவுண்ட் உள்ளிட்டவைகளில் உள்ள பணத்தை செலவழிக்கலாம். ஆனால், வங்கி சார்பில் பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிமாற்றங்களை அனுமதிக்கக்கூடாது எனவும் பயனர்கள் தொடர்ந்து பேடிஎம் யுபிஐ சேவையை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 கடந்த  2022 ஆண்டு பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.