அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2400 கோடி! 5351 வகுப்பறைகள் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு!

அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2400 கோடி! 5351 வகுப்பறைகள் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு!

 ம.பா.கெஜராஜ்,

   அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இதன் ஒருபகுதியில் 5351 புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

 இதன் மூலம் சென்னை சீரடி விரைவு ரயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வந்தடைந்தார். காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் அவரை அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, ஆர்.காந்தி, எ.பி.ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.ஞானசேகரன், முகமதுசகி, உள்ளிட்டோர் வரவேற்றனர்.

  பின்னர் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு சென்ற முதல்வர் அங்கு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகத்தில் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளை கட்டவும் மேம்படுத்தவும், பேராசிரியர்

அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில்2400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

 அதில்,  பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்,

 குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,வேலூர் உள்பட 36 மாவட்டங்களில் ரூ 784 கோடி மதிப்பீட்டில், 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5351 கட்டடங்கள், மற்றும், வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ 15 கோடி 96 லட்சம் மதிப்பீட்டில், 55 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியதாவது,

தமிழகத்தில் பல பள்ளிகளில்  கூடுதல் வகுப்பறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக,2400 கோடி நிதி ஒதுக்கீட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் துவக்கப்பட்டது.

முதற்கட்டமாக இன்று 36 மாவட்டங்களில்784 கோடி நிதி ஒதுக்கீட்டில் 5354 கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இந்த திட்டம் இன்று துவக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்கல்வியை, மருத்துவத்தை இரண்டு கண்களாக பாவித்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

மேலும் தமிழக முழுவதும் சிதிலமடைந்த பள்ளி கட்டிடங்களை சீர்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக  பேராசிரியர்  அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ்2400 கோடி நிதி ஒதுக்கீட்டில் பள்ளிகளை மேம்படுத்த உள்ளோம்.

அதனை அந்த அந்த பகுதி மக்கள் முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் -

  நான் செல்லும் பகுதிகளில் திடீரென பள்ளி ஆய்வுக்கு சென்ற போது சில பள்ளி மாணவர்கள் காலையில் உண்ணாமலேயே பள்ளிக்கு வருகிறோம் என வருத்தம் தெரிவித்தார்கள்.

அதன் காரணமாக  மதிய உணவு திட்டத்தை போல் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன்.

தற்போது சில மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 விரைவில் இத்திடம் மாநில முழுவதுமாக செயல்படுத்தப்படும். இதனால் பள்ளி மாணவர்கள் கல்வி கற்கும் ஆர்வம் அதிகளவில் ஏற்படும் என்று முதலமைச்சர் கூறினார்.

 இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு- துரைமுருகன், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஏ.பி. நந்தகுமார், திரு. ப. கார்த்திகேயன், திருமதி வி. அமுலு விஜயன் கலந்துக் கொண்டனர்.

 அதே போல் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ் அஹமது, இ.ஆ.ப., பள்ளிக் கல்வித்துறை ஆணையர் திரு.நந்தகுமார், இ.ஆ.ப, வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் திண்டுக்கல், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பூர், திருவாரூர், கரூர், மதுரை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

  காட்பாடியில்  நடைபெற இவ்விழாவில்  ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.