தொழிலதிபர் கடத்தல் மேட்டரில் உறவினர் உட்பட ஆறு பேர் கைது! கில்லாடியாய் பிடித்த போலிசார்!

ஜி.கே.சேகரன்,
தொழிலதிபரை கடத்தி 1 கோடி ரூபாய் பேரம்! 12 லட்சம் பறித்த கும்பல்! மூளையாக செயல்பட்ட உறவினர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி,பாஜக நிர்வாகி உட்பட 6 பேர் கைது!
திரும்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி நடுவூர் பகுதியில் பிரபல சன்பீடி உரிமையாளர் யுவராஜ். இவருடைய மகன் தியாகராஜ் (39) இவர் முன்னாள் யூத் காங்கிரஸ் மாநில செயலாளராக இருந்துள்ளார். தியாகராஜின் மனைவி அகிலா இவருடைய அண்ணனான அரவிந்தன் பொன்னேரி ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார்.
இருவரும் ஒன்றாக சுற்றி திரிவது வழக்கம். மேலும் தியாகராஜனிடம் அதிக பணம் இருப்பதை அறிந்த அரவிந்தன் பணம் பறிக்கும் நோக்கில் அவருடைய நண்பரும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மாணவரணி தலைவர் சேண்டி (எ)சந்தோஷ் என்பவருடன் இணைந்து திட்டம் தீட்டியிருக்கிறார்.
இதன் காரணமாக அரவிந்தன் மற்றும் சந்தோசும் இருவரும் தியாகராஜனை கடத்த ஒரு கடத்தல் கும்பலை உருவாக்கியுள்ளனர்.
தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி எலவம்பட்டி பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது திட்டமிட்டபடி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மற்றும் காரில் வந்த 8பேர் கொண்ட கும்பல் தியாகராஜ் சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தியாகராஜ் அணிந்திருந்த சட்டையை கழட்டி அவரை கையை கட்டி கண்களை மூடி காரில்அழைத்துச் சென்றனர்.
அப்போது சந்தோஷின் மற்றொரு நண்பரான வீரமணிகண்டன் இவர் பார் கவுன்சிலில் பதிவு செய்யாத வழக்கறிஞராகவும், பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு வாழ் பிரிவு திருப்பத்தூர் மாவட்ட தலைவராக உள்ளார்.
இவர் தனது மாமனாருக்கு சொந்தமான லக்கிநாயக்கன்பட்டியில் உள்ள பார்ம் ஹவுஸில் கடத்திவரப்பட்ட தியாகராஜனை அடைத்து வைத்து கடத்தல் கும்பலுடன் ஒரு கோடி பணம் கேட்டும் சரா மாறியாக தாக்கியும் மிரட்டியுள்ளனர்.
அதன்பின் தியாகராஜ் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என் அப்பாவிடமும் நான் பேசுவதில்லை எனவே என்னுடைய மச்சானான அரவிந்தனுக்கு போன் செய்து நான் பணத்தைக் கேட்டுப் பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.
தியாகராஜனும் தனது மச்சான் அரவிந்தனுக்கு போன் பண்ணி அவசரமாக பணம் வேண்டும் உன்னிடம் இருக்கும் பணம் அனைத்தையும் எடுத்து வா என்று கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.
அப்போது கடத்தல் கும்பல் பிளானின்படி முதலில் ஒரு கோடி கேட்டு மிரட்டி உள்ளார்.
அவ்வளவு பணம் இல்லை என்பதால் 50 லட்சம் கேட்டுள்ளனர் அதுவும் தர முடியாது என்று கூறியதற்கு பின்பு படிப்படியாக குறைந்து இறுதியில் 12 லட்சம் கொடுப்பதாக அரவிந்தன் ஒப்புக்கொண்டா£.
¢ இவை அனைத்தும் அரவிந்தன் திட்டமிட்டபடியே நடந்தேறி வந்துள்ளது.
அதன் பின்னர் கடத்தல் கும்பல் அரவிந்தனை தர்மபுரி மேம்பாலம் கீழே வரவைத்து 12 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்ட பின்பு கடத்தல் கும்பலிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
அதன் பின் தியாகராஜ் சட்டை கழட்டப்பட்ட நிலையில் கண்களை கட்டி தர்மபுரி மேம்பாலம் கீழே கடத்திச் சென்ற கும்பல் விட்டு சென்றுள்ளனர்.
அப்போது முகத்தில் தாடை உடைந்து முகம் முழுவதும் படுகாயத்துடன் இருந்த தியாகராஜ் அவ்வழியாக சென்ற ஆட்டோ ஒன்றை பிடித்து ஆட்டோவில் தனியார் மருத்துவமனைக்கு தியாகராஜ் சென்றுள்ளார்.
அதன் பின் தன்னுடைய செல்போனில் இருந்து அவருடைய குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். தகவல் அறிந்த மருத்துவமனைக்கு வந்த அவருடைய குடும்பத்தினர் தியாகராஜ்க்கு தீவிர சிகிச்சை அளித்து நேற்று தியாகராஜ் மீண்டும் வீடு திரும்பினார்.
இந்நிலையில் மகனுக்கு இது போல நடந்துள்ளதை அறிந்து ஆத்திரம் அடைந்து இது தொடர்பாக தியாகராஜ் தந்தை யுவராஜ் கந்திலி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதுகுறித்து தனிப்படைகள் அமைத்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணை இறங்கினர்.
அப்போது அரவிந்தனை போலீசார் அழைத்து கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டதில் தியாகராஜனிடம் 12 லட்சம் கொடுத்ததாக கூறிவிட்டு கடத்தல் கும்பலிடம் பத்தரை இலட்சம் மட்டுமே கொடுத்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அரவிந்தன் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதாக ஒப்புக்கொண்டார்.
இதன் காரணமாக கடத்தல் சம்பவத்துக்கு முக்கிய காரணமாக இருந்த விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மாணவரணி தலைவர் சந்தோஷ், தினகரன், வீரமணிகண்டன், அஜித்குமார்,விஷ்வா, உள்ளிட்ட ஆறு பேரை தனி படையினர் பிடித்தனர்.
பின்பு கந்திலி காவல் நிலையத்தில் அரவிந்தன் உட்பட ஆறு பேரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சிலர் தப்பி ஓடியதாகவும் அவர்களைத் தேடும் பணியிலும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சொந்த மாமனையே அடியாட்கள் வைத்து கடத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட மச்சான் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பாஜக நிர்வாகி உள்ளிட்டோரால் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பு:-இந்த பரபரப்பான வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த வீரமணிகண்டன் என்பவரை வழக்கில் இருந்து நீக்கியதுடன் அவரை இன்று அதிகாலை விடுவித்துள்ளனர். அதற்கான காரணத்தை காவல்துறையின் தரப்பில் இதுவரை அளிக்கவில்லை.