தீவிர ஆய்வு நடத்திய திருவாரூர் கலெக்டர்!

க.பாலகுரு,
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீடாமங்கலம் ஒன்றியம், பெரம்பூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினையும், ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தனி நபர் வீடு கட்டப்படவுள்ளது.
அது குறித்தும், பெரம்பூர் ஊராட்சியில் ரூ.27.88 லட்சம் மதிப்பீட்டில் கீழ் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டுவருவதனையும், ரிஷியூர் ஊராட்சியில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.342.85 லட்சம் மதிப்பீட்டில் வி.பி.கட்டளை சாலையில் கோரையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருவதையும், ரூ.25.20 லட்சம் மதிப்பீட்டில் வி.பி.கட்டளை பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளதனையும், ரூ.8.02 லட்சம் மதிப்பீட்டில் காசிநாதர் குளம் தூர்வாரப்பட்டுள்ளதனையும், ரூ.3.11 லட்சம் மதிப்பீட்டில் ரிஷியூர் காசிநாதர் குளம் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
மேலும், ரூ.6.07 லட்சம் மதிப்பீட்டில் ரிஷியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலுள்ள மூன்று வகுப்பறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளையும், அங்கான்வாடி மையத்தில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். நீடாமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போதுல், ஒன்றிய பெருந்தலைவர்.சோம.செந்தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்.விஜயலெட்சுமி, முத்துகுமரன், பெரம்பூர் ஊராட்சிமன்றத்தலைவா விஜயலெட்சுமி, ரிஷியூர் ஊராட்சிமன்றத்தலைவர்.ஷகிலா கணேஷ், ஒன்றிய பொறியாளர்கள், வட்டாட்சியர் தேவேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.