முதல்வரின் 101 வயது தாய் மாமா ஊராட்சி மன்ற அலுவலகத்தை திரந்தார்!

க.பாலகுரு,
திருவாரூர் மாவட்ட நன்னிலம் ஒன்றியம் கோயில் திருமாளம் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தைதமிழக முதல்வர் ஸ்டாலினின் தாய் மாமா கோ.தட்சிணாமூர்த்தி திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கோவில்திருமாளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் பழுதானதால் அதனை இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் சோனியா பாலமுத்து தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.
கோரிக்கையை ஏற்று கடந்த 2022 ஆம் ஆண்டு 24 லட்சத்தி 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டில் பணிகள் நடைபெற்று பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தை முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மைத்துனரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தாய் மாமா தட்சிணாமூர்த்தி (வயது 101) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உடன் இருந்தார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் குத்து விளக்கு ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து மரக்கன்று நடப்பட்டு பொதுமக்களுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில்:- வே.மனோகரன்.திருவாரூர் மா.பெற்றோர் ஆசிரியர் கழக து.தலைவர், கேப்டன் ஷி.வி.செல்வராஜ் கல்விப்புரவலர், சு.சாமிநாதன்.வட்டார வளர்ச்சி அலுவலர்(வஊ),கோ.ராஜ்குமார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ ), மேரி கணபதி ஒன்றிய குழு உறுப்பினர்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்:சங்கீதா கணபதி, பவானி இளையராஜா, சத்யா கணேஷ்குமார்,அகிலா சிவசங்கர், உஷா கோவிந்தராஜன், ஸி.இராஜசேகரன்,தேவிபாலா நேதாஜி,.மனோகரன்,
மூவேந்தன் ஊராட்சி செயலர்,வனிதா சின்னப்பா ,ஊராட்சி மன்றதுணைத் தலைவர், மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.