"சன் பீடி" அதிபரின் மகன் பட்டப் பகலில் கடத்தல்! திருப்பத்தூரில் பரபரப்பு!

ஜி.கே.சேகரன்,
ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க சென்ற தொழிலதிபரை கத்தி முனையில் கடத்தி சென்று 12 லட்சம் பணத்தை பறித்த கும்பல் இது தொடர்பாக கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள பிரபல சன்பீடி கம்பெனியின் உரிமையாளரான யுவராஜ் என்பவரின் மகன் தியாகராஜ். இவர் முன்னாள் யூத் காங்கிரஸ் மாநில செயலாளராக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி எலவம்பட்டி பகுதியில் உள்ள ஆ£.¢டி.ஓ அலுவலகத்திற்கு வாகன உரிமம் புதுப்பிக்க தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் இருவரும், காரில் எட்டு பேர் கொண்ட கும்பலும் தியாகராஜ் சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து கத்தியை காட்டி கத்தி முனையில் தியாகராஜனை கடத்தினர். கை மற்றும் கண்களை கட்டியபடி காரில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் அழைத்து சென்று ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு தியாகராஜை தாக்கியுள்ளனர்.
அதற்கு தியாகராஜ் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என் அப்பாவிடமும் நான் பேசுவதில்லை என கூறியுள்ளார். அதன்பின் தியாகராஜ் அவருடைய மச்சான் அரவிந்துக்கு போன் செய்யும்படி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தியாகராஜ் செல்போனிலிருந்து அவருடைய மச்சான் அரவிந்துக்கு போன் செய்து ஒரு கோடி ரூபாய் பணம் கொண்டு வந்து கொடுத்தால் தியாகராஜனை விட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளனர்.
அவ்வளவு பணம் இல்லை என்றதும் 50 லட்சம் கொடுக்கும்படி கேட்டுள்ளனர். அதனை தொடர்ந்து 25 லட்சம் கேட்டுள்ளனர். அதற்கும் இல்லை என்றதற்கு, இறுதியில் 12 லட்சம் பணத்தை கொடுப்பதாக தியாகராஜ் மச்சான் அரவிந்த் ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள தர்மபுரி மேம்பாலம் கீழே ரூபாய் 12 லட்சத்தை கடத்தலில் ஈடுபட்ட கும்பலிடம் அரவிந்த் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
அதன் பின் தியாகராஜ் சட்டை கழட்டப்பட்ட நிலையில் தர்மபுரி மேம்பாலம் கீழே கடத்திச் சென்ற கும்பல் விட்டு சென்றுள்ளனர்.
அப்போது முகத்தில் தாடை உடைந்து முகம் முழுவதும் படுகாயத்துடன் இருந்த தியாகராஜ் அவ்வழியாக சென்ற ஆட்டோ ஒன்றை பிடித்து ஆட்டோவில் தனியார் மருத்துவமனைக்கு தியாகராஜ் சென்றுள்ளார்.
அதன் பின் தன்னுடைய செல்போனில் இருந்து அவருடைய குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
தகவல் அறிந்த மருத்துவமனைக்கு வந்த அவருடைய குடும்பத்தினர் தியாகராஜிகு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று தியாகராஜ் மீண்டும் வீடு திரும்பினார்.
இது தொடர்பாக தியாகராஜ் தந்தை யுவராஜ் என்பவர் கந்திலி காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன உரிமம் புதுப்பிக்க சென்ற நபரை வழிமறித்து கத்தி முனையில் கடத்தி சென்று பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.