அடச்சே! இதுக்கெல்லாமா சண்டை?!

ஜி.கே.சேகரன்,
பிளாஸ்டிக் கவரில் சிறுநீர் கழித்து அதனை கட்டி கழிவுநீர் கால்வாய் வீசியதால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி நகர போலீசார் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரத்திற்குட்பட்ட பெரிய கடைபஜார் பகுதியில் அப்துல்கரீம் என்பவரின் மகன் பயாஸ்(48) என்பவர் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார். அதேபோல் பயாஸ் மளிகைகடை பக்கத்தில்,தண்டபாணி கோயில் தெரு பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் பிரசாந்த் (29) என்பவர் அரிசி மண்டி வைத்துள்ளார்.
இந்த நிலையில் மளிகைகடை பயாஸ் பிளாஸ்டிக் பையில் சிறுநீர் கழித்து அதனை கட்டி பிரசாந்த்க்கு சொந்தமான அரிசி கடையை ஒட்டி செல்லும் கழிவுநீர் கால்வாயில் வீசியுள்ளார்.
இதனைபார்த்த பிரசாந்த், பயாஸிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடைய தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது பிரசாந்தை பயாஸ் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் பிரசாரத்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது.பின்னர் பிரசாந்தின் அண்ணன் பிரபு பிரசாந்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பப இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் நகர போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பயாஸ் என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.