அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு...குடியாத்தத்தில் பதற்றம்!

அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு...குடியாத்தத்தில் பதற்றம்!

கு.அசோக்,

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து மற்றும் அண்ணாமலையின் படத்தை செருப்பால் அடித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்ட நடத்தினர்.

 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறு பேசி வருவதை கண்டித்து குடியாத்தம் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுகவினர் அண்ணாமலையின் செயலைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியும், அவரது  உருவ பொம்மையை எரித்து புகைப்படத்தை செருப்பால் அடித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

 ஓடோடி வந்த காவல்துறையினா எரிந்துக்கொண்டிருந்த¢ உருவ பொம்மை தீயினை தண்ணீர் ஊற்றி   அணைத்தனர்.

இதனால் குடியாத்தம் நகரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன் மற்றும் குடியாத்தம் நகரச் செயலாளர் ஜெ.கே.எம்.பழனி தலைமையில் அதிமுகவினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.